இன்றிரவு முதல் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் குதிக்கப் போவதாக தெரிவிக்கிறது அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்.
புதிததாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 25,000 ரூபா அபராதத்தை எதிர்த்தே இந்நடவடிக்கையில் இறங்குவதாக தெரிவிக்கப்படுவதுடன் இடது பக்கத்தால் முந்திச் செல்வது மற்றும் வேகக் கட்டுப்பாட்டை மீறுவது போன்ற போக்குவரத்து குற்றங்களுக்கு 25,000 ரூபா அபராதம் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அது அதிகம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தனியார் பேருந்துகளுக்கு கார்பன் வரி நீக்கமும் தரப்பட வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment