அலுகோசு பதவிக்கான முதற்கட்ட நேர்முகப் பரீட்சை இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டவர், பெண்கள் உட்பட 102 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் அதில் 79 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
விண்ணப்பதாரிகள் மனநிலை உட்பட பல்வேறு விடயங்கள் பரீட்சிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டாம் என மனித நேய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment