இன்று அதிகாலை மஹியங்கனையில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் பத்துப் பேர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
திருகோணமலையிலிருந்து தியதலாவ நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பேருந்துடன் வேன் நேருக்கு நேர் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதுடன் மூன்று குழந்தைகள், ஆண்கள் - பெண்கள் உட்பட பத்துப் பேர் உயிரிழந்துள்ளனர்.
பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, வேன் சாரதி உறக்கத்தில் வாகனத்தை மோதியதாகவே கருதுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment