மாலபே பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் காணப்பட்ட கார் ஒன்று தொடர்பில் பிரதேசத்திலிருந்து பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த வாகனம் சுற்றி வளைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் குறித்த வாகனத்திலிருந்து குண்டுகள் மீட்கப்பட்டதாக தகவல்கள் பரவியிருந்த போதிலும் அதில் உண்மையில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பில் தாக்குதல் நடாத்த வந்த பயங்கரவாதிகள் குழுவில் எஞ்சியிருப்போரை பொலிசார் தேடி வருகின்ற அதேவேளை அறியாதோர் அல்லது சந்தேகத்துக்கிடமானோர் தொடர்பில் தகவல் தரும்படி பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment