எங்கள் பேச்சைக் கேட்காதது தான் மின் வெட்டுக்குக் காரணம்: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Friday 12 April 2019

எங்கள் பேச்சைக் கேட்காதது தான் மின் வெட்டுக்குக் காரணம்: மஹிந்த


எங்கள் அரசாங்கம் முன் வைத்த மின்சார திட்டங்களை முறைப்படி நிறைவேற்றியிருந்த மின் வெட்டு மற்றும் விநியோக சிக்கல்கள் இருந்திருக்காது என்கிறார் மஹிந்த ராஜபக்ச.



மஹிந்த அரசில் தொடர்ச்சியாக நுரைச்சோலை ஜெனரேட்டர்கள் பழுதடைந்திருந்த நிலையில் மின் விநியோகம் தடைப்பட்டிருந்தது. இந்நிலையில் இரு வருடங்களின் பின்னர் நுரைச்சோலை ஜெனரேட்டர் பராமரிப்பு வேலைகள் நிமித்தம் கூடிய கால அவகாசம் எடுத்திருந்த பின்னணியில் மின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இப்பின்னணியில் கருத்துரைத்துள்ள மஹிந்த தமது திட்டங்களை நிறைவேற்றாமையே மின் வெட்டுக்குக் காரணம் என தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment