நேற்றைய பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் பாதுகாப்பு நிலவரத்தைக் கருத்திக் கொண்டு இன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தை வழக்கமான வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - நீர்கொழும்பு -மட்டக்களப்பு உட்பட்ட இடங்களில் எட்டு குண்டுகள் வெடித்து 207 பேரைப் பலிகொண்ட கோர சம்பவத்தின் பின்னணியில் இவ்வறிவுப்பு வெளியாகியிருந்தது.
எனினும், வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என பங்குச்சந்தை நிர்வாகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment