ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து போக்குவரத்து சேவைகள் வழமைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளன.
ஞாயிறு தினம் இலங்கையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தொடர் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஊரடங்கு அமுலுக்கு வந்திருந்தது. இன்று காலை 6 மணியுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து தற்போது ரயில் மற்றும் பஸ் சேவைகள் வழமைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளன.
நேற்றைய சம்பவங்களின் பின்னணியில் 207 பேர் உயிரிழந்தமை இறுதியாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment