கோட்டாபே ராஜபக்ச இந்நாட்டில் இருக்கும் வடிகட்டிய இனவாதி என தெரிவிக்கிறார் விக்ரமபாகு கருணாரத்ன.
ராஜபக்ச குடும்பத்துக்குள் இருந்து யார் துட்டுகெமுனு? எனும் போட்டியை உருவாக்கி பேரினவாதிகள் குளிர் காய்ந்து வருவதாக தெரிவிக்கும் விக்ரமபாகு, இலங்கையில் கொலை - கடத்தல் குற்றங்களை செய்த அமெரிக்க பிரஜையெனும் அடிப்படையில் கோட்டாபேவுக்கு அமெரிக்காவில் தண்டனை வழங்கப்படக் கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் பேரினவாத கொள்கையை ஆதரிக்கும் இனவாதிகள் குழம்பிப் போயிருப்பதாகவும் கோட்டாபேயை கைவிட முடியாமல் தவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment