கடந்த ஞாயிறு தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களையடுத்து, தம்புள்ளயில் வைத்து கைதான நபரே சஹ்ரானுக்கு அடுத்ததாக பயங்கரவாதிகள் குழுவின் பொறுப்பாளியாக இயங்கியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர் பொலிசார்.
தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் பெயரில் இயங்கிய குறித்த பயங்கரவாத அமைப்பு மேலும் ஒரு தாக்குதலுக்குத் தயாராக உள்ளதாக வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சஹ்ரானின் சகோதரர் மற்றும் மைத்துனர் ஒருவர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லலாம் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் திங்களன்று தம்புள்ளயில் கைதான நபரே இரண்டாவது நிலை பொறுப்பாளியெனவும் கைதான நபரிடமிருந்து பல முக்கிய தகவல்கள் பெறப்பட்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment