
மாகந்துரே மதுஷோடு கைதாகியிருந்தவர்கள் படிப்படியாக இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டு வரும் தொடர்ச்சியில் இன்று காலை மேலும் இருவர் நாடு திரும்பியுள்ளனர்.
மாளிகாவத்தையைச் சேர்ந்த முஹமது பைசர் மற்றும் மருதானையைச் சேர்ந்த முஹமது ஜாபீர் ஆகிய இருவரே இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டுள்ளதுடன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மாகந்துரே மதுஷும் எவ்வேளையிலும் திருப்பியனுப்பப்படலாம் என பொலிசார் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment