நல்லவர்கள் போன்று வேடமிடும் திருடர்களிடம் எதைக் கொடுத்தாலும் அது நாசமாகவே போகிறது என தெரிவித்துள்ளார் சஜித் பிரேமதாச.
தாய்-தந்தையரின் பெயரில் அரசியல் செய்வது இனி சரிப்பட்டு வராது என ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்த நிலையில் அது சஜித்தைக் குறி வைத்துப் பேசிய விவகாரமாகவே பிரச்சாரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையிலேயே, வங்கிக் கொள்ளையர்கள், குடும்பத்தினர் ஊடாக லஞ்சம் பெறுபவர்கள் நல்லவர்களாக முடியாது எனவும் அவ்வாறனவர்களிடம் எதைக் கொடுத்தாலும் அது நாசமாகவே போகிறது எனவும் சஜித் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment