பிராந்திய பாதுகாப்பு கூட்டுறவின் நிமித்தம் இலங்கைக்கு டோர்னியர் ரக விமானம் ஒன்றை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது இந்தியா.
இலங்கையில் சீன ஆதிக்கம் அதிகரித்து விட்டதாக இந்தியா அச்சம் வெளியிட்டு வரும் நிலையில் பல்வேறு ராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வடக்கில் போன்று தெற்கிலும் வீடுகள் கட்டிக்கொடுக்கும் இந்தியா, பல்வேறு துறைகளில் முதலீட்டை அதிகரித்துள்ளதுடன் பாதுகாப்பு கூட்டுறவை பலப்படுத்தும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment