தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்! - sonakar.com

Post Top Ad

Sunday 21 April 2019

தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்!


நாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார் பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன.



முப்படையினரும் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதோடு சந்தேக நபர்களை விரைவில் கைது செய்வார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஏலவே சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை இனவாத பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ருவன் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment