கொழும்பில் ஆறு இடங்களிலும், நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பிலும் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ள நிலையில் ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்றது தற்கொலைத் தாக்குதல் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த ஹோட்டலில் அறை இலக்கம் 616ல் தங்கியிருந்த இருவர் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் குறித்த நபர்களே தற்கொலைத் தாக்குதலை நடாத்தியிருக்கலாம் அல்லது வெடிபொருட்களைக் கொண்டு வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சந்தேக நபர்களுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புபட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்ப்படுகின்றது.
No comments:
Post a Comment