ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடாத்தி அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தவறினால் வீதியிலிறங்கிப் போராட நேரிடும் என எச்சரித்துள்ளார் கார்டினல் மல்கம் ரஞ்சித்.
அந்நிலையை உருவாக்காது அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும், ஜனாதிபதி விசாரணைக்குழுவொன்றை அமைத்துள்ள போதிலும் அதன் செயற்பாடுகள் எந்த அளவில் இருக்கிறது என்பது பகிரங்கப்படுத்தப்படவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாக்குதல்களுக்குப் பின் சமய தலைமைத்துவ நடவடிக்கைகளை பொறுப்புடன் செயற்படுத்திய கார்டினல் பொதுமக்களின் அபிப்பிராயத்தை வென்றெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment