துப்பாக்கி, தோட்டா மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன் ஹெரான, புஹுவல விகாரையருகே காணப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
32, 34 மற்றும் 43 வயதுடைய பத்தரமுல்லயைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளைத் தொடர்கின்றனர்.
விசேட அதிரடிப்படையினரின் பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கையின் பகுதியாக இக்கைதும் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment