மனித உரிமை அமைப்புகளே பொறுப்பு கூற வேண்டும்: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Saturday 27 April 2019

மனித உரிமை அமைப்புகளே பொறுப்பு கூற வேண்டும்: மைத்ரி


யுத்த நிறைவின் பின் இலங்கையில் அதிகரித்த மனித உரிமை அமைப்புகளின் தலையீடுகளே உளவுத்துறை பலவீனப்படுவதற்கான பிரதான காரணம் என தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


மேற்கத்தேய கலாச்சாரத்தை விரும்பாததனாலேயே ஐ.எஸ். அமைப்பினர் தேவாலயங்களை குறி வைத்துள்ளதாகவும் விளக்கமளித்துள்ள ஜனாதிபதி, நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு முக்கிய உத்தரவுகள் பல பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது தாக்குதலின் போது பதியப்பட்டதாகக் கருதப்படும் காணொளியொன்றில் தாக்குதல்கள் இனியும் தொடரும் என விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கையின் பின் இன்றைய தினம் தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஜமாதே மில்லத் இப்ராஹீம் ஆகிய இரு அமைப்புகளை ஜனாதிபதி தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment