சாய்ந்தமருது: சஹ்ரானின் சகோதரர்கள் சைனி மற்றும் ரிழ்வான் பலி! - sonakar.com

Post Top Ad

Saturday 27 April 2019

சாய்ந்தமருது: சஹ்ரானின் சகோதரர்கள் சைனி மற்றும் ரிழ்வான் பலி!



காத்தான்குடியில் தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் தீவிரவாத அமைப்பைத் தோற்றுவித்த சஹ்ரானின் இரு சகோதரர்களான சைனி, மற்றும்  ரிழ்வான்  நேற்று சாய்ந்தமருதில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இதன்போது குறித்த நபர்களின் தந்தை  ஹாஷிமும் பெரும்பாலும் உயிரிழந்திருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.



இறுதிக்கட்டத்தில் குறித்த மூவரும் இணைந்து வெளியிட்ட காணொளி தற்போது பரவி வருவதுடன் அங்கு குழந்தைகள் ஆறு பேரும் பலியாகியுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வீட்டிலிருந்த பெண்களில் ஒருவர் உயிர்தப்பியுள்ள அதேவேளை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிர் தப்பிய பெண் சஹ்ரான் மற்றும் சைனி அல்லது ரிழ்வான் ஆகியோரில் ஒருவரது மனைவியாகவோ அல்லது தாயாராகவோ இருக்கலாம் என இக்குடும்பத்தினை நன்கு அறிந்த ஒருவர் சோனகர்.கொம்முக்கு தகவல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment