கொச்சிக்கடை பகுதியில் நேற்றைய தினம் தாக்குதல்தாரிகளால் கொண்டுவரப்பட்டு கைவிடப்பட்டதாகக் கருதப்படும் வேன் ஒன்றில் காணப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய முனைந்த போது அங்கு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
பிரதேசத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, பாதுகாப்பான முறையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றைய பயங்கரவாத தாக்குதல்களையடுத்து இன்று நள்ளிரவு முதல் அவசரகால சட்டம் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment