நேற்று உருவான அசாதாரண சூழ்நிலையைக் கட்ப்பாட்டுக்குள் கொண்டுவரும் படி தான் விடுத்த கட்டளையின் பிரகாரம் பாதுகாப்பு படையினர் சிறப்பாக செயற்பட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
உளவுத்தகவல்களை முறைப்படி பகிராது, நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று பாதுகாப்பு கவுன்சிலைக் கூட்டிய ஜனாதிபதி அவசரகால சட்டத்தை அமுலுக்குக் கொண்வருவதற்கும் இணங்கியுள்ளதன் பின்னிணியில் நள்ளிரவு முதல் அவசரகால சட்டம் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment