வெலிமட: வீடொன்றிலிருந்து பெருந்தொகை பணம் மீட்பு! - sonakar.com

Post Top Ad

Monday 29 April 2019

வெலிமட: வீடொன்றிலிருந்து பெருந்தொகை பணம் மீட்பு!


வெலிமட, பொரகஸ் பகுதியில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீடொன்றை சோதனையிட்ட பொலிசார் அங்கு வாளிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு கோடி நாற்பத்து எட்டு லட்ச ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


முஸ்லிம் நபர் ஒருவருக்குச் சொந்தமான இடம் குறித்து கிடைக்கப் பெற்ற சந்தேகத்துக்கிடமான தகவலையடுத்து சோதனை நடவடிக்கை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு இவ்வாறு பணம் மீட்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக பெருந்தொகைப் பணத்தை ஒளித்து வைத்திருந்ததன் பின்னணியில் குறித்த வீட்டின் 57 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment