பண்டிகைக்காலத்தில் பெருமளவு குற்றச் செயல்கள் இடம்பெறும் தொடர்ச்சியில் மது போதையில் விகாரைக்குள் வர வேண்டாம் என அறிவுரை சொன்ன பௌத்த துறவியொருவர் மீது இரு சகோதரர்கள் இணைந்து தாக்குதல் நடாத்திய சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
ரஜங்கனய, சுதர்சனாராமய விகாரையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் அங்கு விரைந்த பொலிசார் இருவரைக் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, நாட்டின் வேறு பல இடங்களில் பொலிசார் மீதான தாக்குதல் உட்பட ஆகக்குறைந்தது மூன்று கொலைச் சம்பவங்கள், வீடெரிப்பு, அசிட் தாக்குதல் போன்ற நிகழ்வுகளும் புத்தாண்டையொட்டி இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment