இலங்கையில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு உதவ இன்டர்போலின் விசேட குழுவொன்று இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - நீர்கொழும்பு - மட்டக்களப்பு உட்பட்ட இடங்களில் எட்டு குண்டுகள் ஒரே நாளில் வெடித்திருந்த நிலையில் இதுவரையான உத்தியோகபூர்வ அறிவிப்பின் அடிப்படையில் 290 பேர் உயிரிழந்து, 450 பேர் வரை காயமுற்றுள்ளனர்.
வெளிநாட்டு உதவியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கோரியிருந்த நிலையில் இன்டர்போல் விசேட குழு இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment