நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் அவசரகால சட்டம் ஊடாக சோதனை நடவடிக்கைகள், கைதுகளை மேற்கொள்ளும் அதிகாரங்களை எதிர்வரும் 30 நாட்களுக்கு இராணுவத்தினர் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
ஞாயிறு தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் நாட்டின் பல பாகங்களிலும் தேடல் நடவடிக்கைகள் தொடர்வதுடன் பல கைதுகள் பற்றி தகவல் அறியமுடிகிறது.
சில இடங்களில் சந்தேக நபர்கள் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை, தேசிய தவ்ஹீத் ஜமாத் என அறியப்படும் அமைப்போடு நெருங்கிய தொடர்புகளை பேணி வந்த ஒரு சிலரும் பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment