சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய நபரின் உறவினர் ஒருவர், கண்டி - கலஹாவில் வைத்து பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், அதே ஹோட்டலில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றி வந்துள்ளதுடன் கைதானவரிடம் 150 கைத்தொலைபேசிகள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நன்கு திட்டமிடப்பட்டு, ஓழுங்கு படுத்தப்பட்ட நிலையில் கொழும்பில் மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்த அதேவேளை பல வெளிநாட்டவர் மற்றும் சிறுவர்களும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment