மாவனல்லை பகுதியில் சந்தேகத்துக்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் இராணுவ பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாவனல்லை பேருந்து நிலையத்தின் அருகே கைவிடப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதுடன் நாட்டின் பல இடங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை அவதானிக்கத்தக்கது.
நேற்றைய தினம் வெள்ளவத்தையிலும் இவ்வாறு ஒரு மோட்டார் சைக்கிள் காணப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு படையினர் அதனை சிறு வெடிபொருள் கொண்டு வெடிக்க வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment