ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறக்கூடிய ஒருவரையே பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளராக நிறுத்தப் போவதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
மக்கள் வரிச்சுமையால் தவித்து வருவதாக தெரிவிக்கின்ற அவர், பெரமுனவின் வேட்பாளர் நம்பிக்கையைத் தரக்கூடியவராகவும் நிச்சயமாக வெற்றிபெறக் கூடியவராகவும் இருப்பார் என தெரிவிக்கிறார்.
கோட்டாபே ராஜபக்ச, வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பில் பல நடவடிக்கைகளில் இறங்கியுள்ள போதிலும், அது முதலீட்டாளர்களைக் கவர்வதற்கான தந்திரம் என ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment