4 நாட்களில் வாகன விபத்துக்களால் 42 பேர் மரணம் - sonakar.com

Post Top Ad

Wednesday 17 April 2019

4 நாட்களில் வாகன விபத்துக்களால் 42 பேர் மரணம்


கடந்த நான்கு தினங்களில் வாகன விபத்துக்களால் 42 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


இன்று காலையில் மஹியங்கனையில் இடம்பெற்ற விபத்தில் மாத்திரம் பத்துப் பேர் உயிரிழந்திருந்த நிலையில் பண்டிகைக்கால விசேட போக்குவரத்து கடமையில் பணியாற்றிய பொலிசார் சுமார் 30,000 வழக்குகளையும் பதிவு செய்துள்ளனர்.

பொதுவாகவே இலங்கையில் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துதல், விபத்துகள் மற்றும் கொலை சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment