தாய் - தந்தையின் பெயரில் 'அரசியல்' இனி சரிவராது: ரவி! - sonakar.com

Post Top Ad

Monday, 15 April 2019

தாய் - தந்தையின் பெயரில் 'அரசியல்' இனி சரிவராது: ரவி!


தமது தாய், தந்தையரின் பெயரில் அவர்களின் அரசியல் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தாமும் நிலைப்பதற்கும், நாட்டின் தலைவராவதற்கும் சிலர் கனவு கண்டு கொண்டிருப்பதாகவும், அது இனி சரிவராது எனவும் தெரிவிக்கிறார் ரவி கருணாநாயக்க.



ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்பதில் எவ்வித மாற்றமும் இல்லையெனவும் தேவையான மாற்றத்தை தனி நபரன்றி, கட்சி உயர் பீடம் கூடியே மேற்கொள்ளும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

இந்நிலையில், ஒரு சிலர் குறுக்கு வழியில் தமது தாய்-தந்தையரின் பெயரில் அரசியல் செய்ய முனைவதாகவும் அது எடுபடாது எனவும் ரவி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment