நாட்டில் தற்போது நிலவுகின்ற அதிக வெப்பநிலை, வரட்சி காரணமாக கல்முனை அல் ஹாமியா அரபு கல்லூரியின் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் மழைவேண்டித்தொழுகை இன்று (15 ) காலை 7.30 மணியளவில் கல்லூரியின் வளாகத்தில் இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ சீ தஸ்தீக் ( ஹாமி மதனி) அவர்களினால் தொழுகையும் அதனைத் தொடர்ந்து குத்பா பிரசங்கமும் துஆ பிரார்த்தனையும் நிகழ்த்தப்பட்டது.
இதில் கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
-எம்.என்.எம்.அப்ராஸ்
No comments:
Post a Comment