ஊவா: முதலமைச்சருக்கு எதிராக தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday 3 April 2019

ஊவா: முதலமைச்சருக்கு எதிராக தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பு


ஊவா மாகாண முதலமைச்சர் பதுளை பிராந்திய மருத்துவ அதிகாரியை முறைகேடான வார்த்தைப் பிரயோகங்கள் கொண்டு விளித்திருந்ததன் பின்னணியில் இடம்பெறும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் இன்றும் தொடர்கிறது.


இப்பின்னணியில் ஊவா மாகாணத்தில் பெரும்பாலான வைத்தியசாலைகள் முடங்கிப் போயுள்ளதுடன் பொது மக்கள் பாரிய அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.

முதலமைச்சர் சாமர சம்பத் திசாநாயக்கவை கண்டித்து 21 தொழிற்சங்கங்கள் இந்நடவடிக்கையில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment