சிங்கள கலாச்சாரத்துக்குரிய திருமண ஆடையணிந்து கண்டி நகரில் ஆவணப்படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் வெளிநாட்டவர்கள் மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளர்களுடன் பொது மக்கள் முறுகலில் ஈடுபட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனம், பாதுகாப்பு அமைச்சு உட்பட அனைத்து இடங்களிலிருந்தும் முறையான அனுமதியைப் பெற்றே இவ்வாவணப்படத்துக்கான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள போதிலும் பொது மக்கள் சிலர் ஒன்றிணைந்து எதிர்ப்பு வெளியிட்டதன் பின்னணியில் படமாக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் நிர்ப்பந்தத்தின் பேரில் அழிக்கப்பட்டுள்ளது.
சிங்கள தேசிய திருமண உடையில் 'ஓரின' திருமணம் தொடர்பிலேயே இவ்வாவணப்படம் உருவாக்கப்பட்டதாக அறியமுடிவதோடு பொது மக்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது இதன் பின்னணியிலேயே என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment