நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் தலதா மாளிகை, பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துறவிகள் தினசரி பூஜை வழிபாடுகளில் ஈடுபடவுள்ள போதிலும் தலதா மாளிகைக்குள் பொது மக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தாக்குதலில் 207 பேர் உயிரிழந்து 450 பேர் வரை காயமுற்றுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment