ஞாயிறு தினம் நாட்டை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்களை வழிநடாத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் சஹ்ரான், காத்தான்குடியிலிருந்து தலைமறைவான காலத்தில் மாலைதீவு சென்றிருந்ததாக உலவும் தகவலை அந்நாட்டு குடிவரவு குடியகல்வு திணைக்களம் நிராகரித்துள்ளது.
தமது பதிவுகளின் அடிப்படையில் சஹ்ரான் தமது நாட்டுக்கு வந்ததாக எந்தவித பதிவும் இல்லையென அத்தகவலில் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தென்னிந்தியாவில் ஆறு மாதங்களுக்கு முன்பு கைதான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பின் முக்கிய நபர் ஒருவர் ஊடாகவே இலங்கையில் இடம்பெறவுள்ள தாக்குதல்கள் பற்றித் தாம் அறிந்ததாக இந்தியா தெரிவித்து வருகின்றமையும் தேசிய தவ்ஹீத் ஜமாத்தினர் ஐ.எஸ் சர்வதேச வலையமைப்பின் பயிற்சி பெற்ற உறுப்பினர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment