கோட்டாபே 'அரசியல்' கற்றுக்கொள்ள வேண்டும்: வாசு - sonakar.com

Post Top Ad

Wednesday 17 April 2019

கோட்டாபே 'அரசியல்' கற்றுக்கொள்ள வேண்டும்: வாசு


ஜனாதிபதி தேர்தலுக்கு கோட்டாபே ராஜபக்ச தயாராகிவிட்டதாக தெரிவிக்கிறார் வாசுதேவ நாணாயக்கார.


தமது கட்சி பிரமுகர்களுடன் கோட்டாபேவை சந்தித்திருந்த நிலையில், தம்மோடு இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் ஊடாக கோட்டாபே தயார் என்பதை உணர்ந்ததாகவும் எனினும் கோட்டாபே இன்னும் 'அரசியல்' கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது எனவும் வாசு தெரிவிக்கிறார்.

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை கோட்டாபே கைவிடவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், மஹிந்த ராஜபக்ச இதற்கான அனுமதியை வழங்குவாரா என்பதும் தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment