காத்தான்குடியில் பாரிய சோதனை நடவடிக்கைக்குத் தயாராகும் இராணுவம் - sonakar.com

Post Top Ad

Friday, 26 April 2019

காத்தான்குடியில் பாரிய சோதனை நடவடிக்கைக்குத் தயாராகும் இராணுவம்


கல்முனை - சாய்ந்தமருது பகுதியில் நேற்றரவு இடம்பெற்ற சம்பவங்களையடுத்து காத்தான்குடி பகுதயில் பாரிய சோதனை நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இப்பகுதியிலிருந்து சென்றோரே சாய்ந்தமருதில் சில வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததாகவும் அதில் ஒரு வீட்டிலிருந்தே பெருந்தொகை வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில் காத்தான்குடி மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் வீட்டுக்கு வீடு சோதனை நடாத்தினாலும் மக்கள் பதற்றமின்றி ஒத்துழைக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment