அமெரிக்கா சென்றிருந்த கோட்டாபே ராஜபக்ச இன்று நாடு திரும்பியுள்ளார்.
இம்முறை அமெரிக்கா சென்றிருந்த நிலையில் கோட்டாபேவுக்கு எதிராக அங்கு இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதற்கான நீதிமன்ற அழைப்பாணை கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மூன்று வாரங்களுக்குள் அதற்கான பதிலை வழங்க வேண்டிய கோட்டாபே தற்போது இலங்கை திரும்பியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் தனது அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட உள்ளதாக கோட்டாபே தெரிவித்து வரும் நிலையில் அவருக்கு எதிராக சிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment