பரப்புரைகளின் பலமும் பதிலுரைகளின் பலவீனமும் - sonakar.com

Post Top Ad

Friday 5 April 2019

பரப்புரைகளின் பலமும் பதிலுரைகளின் பலவீனமும்


எவ்வித தனிக்கையும் தடையும் இன்றி கருத்தை ஆக்க, அறிய, வெளிப்படுத்த ஒருவருக்கு இருக்கும் சுதந்திரமே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமாகும். கருத்து வெளிப்பாடு என்பது பேச்சுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், சமயச் சுதந்திரம் போன்ற பல்வேறு சுதந்திரங்களுடன் இணைவாக முன்னிறுத்தப்படுகிறது. 



ஒரு நபரின் கருத்தை மற்றுமொரு நபர் புரிந்துகொள்ள வேண்டுமாயின் அவர் அறிந்த, தெரிந்த மொழியில் அவரிடம் முன்வைக்கும்போதே அவரால் இலகுவில் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில், மொழி ஒரு நாட்டினுடைய, தனி மனிதனுடைய வாழ்வின் முக்கிய அம்சமாக இருக்கிறது.

இனவாத அரசியல் வாதிகளும், இனவாத செயற்பாட்டாளர்களும் இந்நாட்டில் தொடர்ந்து ஏதோ ஒரு பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் அல்லது ஏற்படுத்த வேண்டும் என்ற மனப்பாங்கிலேயே உள்ளனர். இனவாத பருவகால நோயும் அதுவாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. இனவாதப் போக்குடையவர்களின் செயற்பாடுகள, ஊக்கபபடுத்தல்கள்; மற்றும் பரப்புரைகள். அதனை நிரூபிப்பதாக அமைகிறது.. ஏனெனில், கடந்த சில வாரங்களாக வில்பத்துக் காட்டைய அழிப்பதாக போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு அதில் அமைச்சர் றிஷாட் பதியூதீனை தங்களது இனவாதப் பரைப்புரையின் கருப்பொருளாக கையிலெடுத்துள்ளதைக் காண முடிகிறது. அத்துடன் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இப்பரப்புரைகள் பலமாக அமைவதையும் காணக் கிடைகிறது. இவற்றின் பின்னணயில் பல்வேறு விடயங்கள் இருந்தாலும், இக்காலங்களில் போலிப் பரப்புரைகள் முன்வைப்பதன் நோக்கம் புதுவரு காலமாக ஏப்ரல் மாதத்தில் முஸ்லிம் வர்த்த நிலையங்களில் பௌத்த சிங்கள மக்களை நுகர்வு நடைவடிக்கைகளில் ஈடுபடாமல் தடுப்பதாகவும் இருப்பத கடந்த சில வருடங்களில் நடந்தேறிய நடவடிக்கைகளின் ஊடாக உணர்ந்து கொள்ள முடிகிறது. 

இந்நாட்டில் சமாதானமும் அமைதியும், சமூக நல்லிணக்கமும் ஏற்படக் கூடாது என்ற சிந்தனையிலேயே இனவாதப் பரப்புரைகளை பொளத்த - சிங்கள மக்கள் மத்தியில் சில இனவாத அரசியல்வாதிகளும், அமைப்புக்களின் பிரதிநிதிகளும் முன்வைதத்து செயற்பட்டுக் கொண்டிருப்பதோடு அவற்றிற்கு ஒரு சில சிங்கள மொழி ஊடகங்களும் ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

30 வருட காலம் இடம்பெற்ற யுத்தத்திற்கு முடிவுகட்டப்பட்டுள்ளதால் மாத்திரம் இந்நாட்டில் உண்மையான சமாதானம் ஏற்பட்டுவிட்டதாக அர்த்தம் கொள்ள முடியாது. அது எதிர்மறை சமாதானம் மாத்திரமேயாகும். நிலையான சமாதானத்தை அல்லது உடன்பாடான சமாதானத்தை இந்நாட்டில் அடைய வேண்டுமாயின,; திருப்திகொள்ளத்தக்கதாக  மக்களது பிரச்சினைகளைத் தீர்த்து தேவைகளைப் பூர்த்தி செய்தல், சமூக இசைவினை ஏற்படுத்துதல், சமமின்மைகளை இயன்றவரை குறைத்தல், நிலையான மக்கள் பயன் பெறும் அபிவிருத்தி, மனித உரிமைகளுக்கும் சட்டவாட்சிக்கும் மதிப்பளித்தல், இணக்கத்தோடு இணைந்த ஜனநாயகமான அரசியல் நிலைப்பாடு என்பன நாட்டில்  ஏற்படுத்தப்பட வேண்டும். 

யுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்தம் நிறைவடையவுள்ள நிலையில் மேற்குறித்தவற்றை அடைவதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் இனவாதம் வௌ;வேறு உருவங்களில் அவற்றிற்கு எதிராகச் செயற்பட்டிருக்கிறது என்பதை கடந்த கால வரலாறுப்; படிமங்கள் புலப்படுத்துகின்றன.  ஆதிகாலத்தில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மனிதர்களில் எழுந்த கட்டுப்பாடற்ற மனவெழுச்சிகள், வன்முறைகளுக்கு வழிவகுக்கும் அடிப்படை இயல்பூக்கங்கள்;; போன்று தற்போதைய சில மனிதர்களிடையேயும் காணப்படத்தான் செய்கிறது. அதனால்தான,; அத்தகையவர்கள் கட்டுப்பாடாற்ற மனவெழுச்சிகளினால் உந்தப்பட்டு வன்முறைசார்ந்த, அமைதியைக் குழப்பக் கூடிய செயற்பாடுகளையும், கருத்துக்களையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவற்றிற்கு சில ஊடகங்களும் பக்க துணையாகச் செயற்படுவதைக் காணலாம். 

அரசியல், வர்த்தகம், பிரபல்யம், விளம்பரம் சார்ந்த சுயரூபங்களை வேண்டி நிற்பவர்களினால்; ஆதி மனிதர்களிடையே சுதந்திரமாகக் காணப்பட்ட அடிப்படை இயல்பூக்கள் நவீன யுகத்தில் காலத்திற்குக் காலம் வெளிப்படுத்தப்படுவதனால் இந்நாட்டில் இன்னுமே  சமாதான கலாசார மிக்க சமூகத்தை உருவாக்க முடியாமல் உள்ளது. மனிதனை மனிதனாக மாற்றக் கூடிய ஆரோக்கியமான மனப்பாங்குகளை கட்டியெழுப்பக் கூடிய மனவெழுச்சிகளை முகாமைத்துவம் செய்தல், சகித்துக்கொள்ளல், பிறர் உணர்வை தான் பெறுதல், நன்றியுடைமை, பாராட்டுதல், வரவேற்றல், விட்டுக்கொடுத்தல், திறந்த புத்துணர்வான கலந்தரையாடல்களை மேற்கொள்ளல் போன்ற சமாதானக் கலாசாரத்திற்கான, நல்லிணக்கத்திற்கான பண்புகளை வளர்ப்பதற்கான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது காலத்தின் அவசியமாகவுள்ளது.

இவற்றை அரசியல்வாதிகள் மத்தியிலும் ஏனைய மரண இயல்பூக்கள் கொண்டவர்களிடத்திலும் ஏற்படுத்துவதில் ஊடகங்கள் பெரும்பங்காற்ற வேண்டியுள்ளது. ஊடகம் என்பது சக்திமிக்கது. மனிதனை மனிதனாக மாற்றவும், மிருகமாக மாற்றமும், ஆட்சியை ஏற்படுத்தவும் அவற்றை இல்லாமல் செய்யவும் ஊடத்தினால் முடியும். அந்தளவு சக்தி மிக்க ஒன்றான ஊடகம் ஊடகத் தர்மத்தையும் ஊடக ஒழுக்கக் கோவையையும் கடைபிடித்து செயற்பட வேண்டிய பொறுப்பும் உள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
முஸ்லிம்களும் ஊடக வரட்சியும்;
சனத்தொகை எண்ணிக்கை அடிப்படையில் உலகில் 59வது இடத்தை இலங்கை வகிக்கிறது. நம் நாட்டில்; ஏறக்குறைய 2 கோடியே 20 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில்  74 வீதமானோர் தாய்மொழியாகச் சிங்களத்தையும் 18 வீதத்தினர் தாய் மொழியாகத் தமிழையும் 8 வீதமானோர் ஏனைய மொழிகளையும் பேசுகின்றனர். இருப்பினும், இலங்கையின் சனத்தொகை எண்ணிக்கiயில் 14 வீதத்தினரே ஆங்கில மொழியைப் பேசுவதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. எனவே, இந்நாட்டில் வாழும் மக்களின் கருத்துக்கள் அதிகளவில் பகிர்ந்துகொள்ளப்படுவது சிங்கள மொழியிலும், தமிழ் மொழியிலும் என்பது புலப்படுகிறது.

ஒரு நாட்டில் ஒருவரின் அல்லது ஒரு சமூகத்தின் கருத்து வெளிப்பாட்டை எடுத்துச் செல்லும் ஓரலகாக ஊடகம் விளங்குகிறது. ஊடகம் என்பது ஒரு சுதந்திர நாட்டின் நான்கு தூண்களில் ஒன்று. ஏனைய மூன்றும்; சட்ட மன்றம், நிர்வாகம், நீதிமன்றம் என்பனவாகும். ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் ஒரு சமூகத்தின் அல்லது ஒரு இனத்தின் உரிமைகள் அதிகாரத் தரப்பினால் அல்லது மற்றுமொரு சமூகத்தினால் அல்லது அச்சமூகத்தைச் சார்ந்த ஒரு குழுவினால் மறுக்கப்படுகின்றபோது, மீறப்படுகின்றபோது அல்லது பறிக்கப்படுகின்றபோது அவை தொடர்பில் பாதிக்கப்படும் சமூகம் அல்லது இனம் தமது நிலைப்பாட்டை, தாம் பாதிக்கப்படும் விதத்தினை, எதிர்நோக்கும் விளைவுகளை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்துவது பொதுவான நிலையாகும்.

இந்நாடு காலணித்துவ ஆட்சியின் கீழ் இருந்த காலகட்டத்தில் வாழ்ந்த சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கிய சவால்களையும், நெருக்கடிகளையும் விடவும் சுதந்திரத்தின் பிற்பட்ட காலத்தில் வாழ்கின்ற  சிறுபான்மை சமூகங்களான தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகளும்; சவால்களும் அதிகம் என்றே சமூக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்நிலைமை கொஞ்சம் முன் நகர்த்தப்பட்டு  அண்மைக்காலமாக முஸ்லிம்களை நோக்கிய நெருக்கடிகளை கடும்போக்காளர்கள் முன்னெடுத்துவருவதை அவதானிக்க முடிகிறது. அதன் அண்மைய உதாரணமாக வில்பத்துக் காட்டை அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்கள் அழித்து அதில் அவர்கள் குடியேறி வருகிறார்கள் என்ற பொய் பிரச்சாரமாகும். இப்பிரச்சாரத்தில் உண்iயில்லை என அரச தரப்பிலும், பௌத்த சிங்கள மத்தியிலுள்ள சமாதான விருப்பிகளும் கூறி வருகின்றபோதிலும். இப்போலிப் பரப்புரைகள் கடும்போக்கு சமூகவலைளத்தவாதிகளினால பலமாக முன்னெடுக்கப்பட்டு வருவதையும் காணக் கூடியதாகவுள்ளது.

1980 களின் பிற்பட்ட காலத்தில் உருவான யுத்த சூழ்நிலைகளினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழ் சமூகமும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிப்புக்குள்ளான வடக்கு மற்றும் கிழக்கு வாழ் முஸ்லிம் சமூகமும் எதிர்கொண்ட விளைவுகளின் நிதர்சனங்களை இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழுகின்ற  சிங்கள மக்கள் முழுமையாக அறிந்திருக்க சந்தர்ப்பம் இருக்கவில்லை. அதுமாத்திரமின்றி 2012 முதல் இன்று வரை முஸ்லிம்கள் தொடர்பாக பௌத்த – சிங்கள மக்கள் மத்தியில் பலமாக  முன்வைக்கப்பட்டு வரும் போலி  பரப்புரைகளுக்கும்  இடைத்தடங்களை ஏற்படுத்தி அவை போலிப்பரைப்புரைகள் என்ற பதிலுரைகளை முன்வைக்க முஸ்லிம் சமூகம் இன்னும்  தமக்கான பலமுள்ள பல்மொழி ஊடகத் கட்டமைப்பகை; கட்டியெழுப்ப  முயற்சிக்கவில்லை. இதனால் பலமான போலிப் பரப்புரைகளுக்கான பதிலுரைகள் பலவீனமாகவே காணப்படுகிறது.

பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் பெரும்பாலான மக்கள், நாட்டு நடப்புக்களையும் ஏனைய  கருத்துக்களையும் விமர்சனங்களையும் இதர விடயங்களையும் அறிந்துகொள்வது சிங்கள மொழி ஊடகங்கள் வாயிலாக மாத்திரமே என்பது அறிந்த விடயமாகும். அச்சிங்கள மொழி ஊடகங்கள் எந்தளவு தூரத்திற்;கு சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளை ஊடகத் தர்மத்துடனும், நடுநிலைபோக்குடனும் பிரசுரிக்கிறது என்பது ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய விடயமாகவுள்ள சூழலில் சில ஊடகங்க நிறுவன முகாமைத்துவமும், சில  ஊடகவியலாளர்களும் இப்போலிப்பரப்புரைகளுக்கு முன்னுரிமை வழங்கி வருவதை காண முடிகிறது. 

இன்று பத்திரிகை, வானொலி, தொலக்காட்சிகளை பின்தள்ளி சமூகவலைத்தளங்கள் போலிப் பரப்புரைகளை மக்கள் மத்தியில் முன்கொண்டு செல்வதில் முதன்மை வகிக்கிறது. என்பதை வில்பத்து தொடர்பிலும், அமைச்சர் றிஷாட் பதியூதீன் குறித்தும் போலிப் பிரச்சாரங்களை முன்வை;பதற்காக 300க்கும் மேற்பட்ட போலி பேஸ்புக் பக்கங்கள் உருவாக்கப்பட்டு சிங்கள பௌத்த இளைஞர்கள் மத்தியிலும், கிராமப்புற மக்களிடையிலும்; இனவாதப் பரப்பரைகள முன்னெடுக்கப்படுதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

இலங்கையில் 'ஸ்மாட்போன்' ஊடாக இணையத்தளத்தை பயன்படுத்துவர்களின் தொகையில் 96 வீதமானோர் பேஸ்புக் சமூகவலைத்தளத்தை பயன்படுத்துகின்றமை 2018ஆம் ஆண்டின் புள்ளி விபரங்களினூடாக அறிய முடிகிறது. இதில் இலங்கையின் சனத்தொகை அடிப்படையில் பெரும்பான்மை இனத்தவர்களே அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். சனத்தொகை அடிப்படையில்  பெரும்பான்மையினர் அதிகளவு எண்ணிக்கையில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்துகின்றார்கள் என்று கருதினால் பேஸ்புக் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துகின்றவர்களில்; அதிகளவு வீதத்தை அவர்களே கொண்டுள்ளதுடன் 19 முதல் 29 வயது வரையான இளைஞர்களே அதிகம் பேஸ்புக் பாவனையாளர்களாகவும் காணப்படுகின்றனர். இந்த இளைஞர்களை பேஸ்புக் சமூகவலைத்தளத்தினூடாக கவர்ந்திலுத்து முஸ்லிம்களுக்கு எதிரான பலமான  போலிப்பரப்புகளை முன்னெடுத்து வருவதன் மிகப் பெரிய அத்தாட்சியாக நாம் நண்பர் என்ற அமைப்பு கடந்த வாரம் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக 28 நகரங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தமை சான்றாகவுள்ளது. 

இந்நிலைமைக்குக் காரணம், முஸ்லிம் மக்கள் பக்கம் காணப்படும் நியாயங்களையும், கருத்துக்களையும், போலிப் பரப்புரைகளுக்கு எதிரான பதிலுரைகளையும் சிங்கள மொழியில் பலமாக முன்வைக்க முடியாத ஊடக வரட்சி முஸ்லிம் சமூகத்தில் தொடர்ந்து காணப்படுவதாகும் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

போலிப் பரைப்புரைகளும் பலமான  பதில்களும்

இலங்கையில் ஊடகங்களின் எண்ணிக்கைகள் அதிகரித்துக்கொண்டு சென்றாலும், சென்றடைய வேண்டிய செய்திகளும் தவகல்களும் காலத்தின் தேவைக்கேற்பவும், சமூகங்களின் ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்கும், முன்னேற்றத்திற்கும், அபிவிருத்திக்கும் ஏற்பவும், அவரவருக்குரித்தான விதத்தில் அவரவர் நிலைமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் சென்றடைகின்றனவா? இடம்பெறுகின்ற நிகழ்வுகள் அதனால் பாதிக்கப்படுகின்ற சமூகங்களின் நிலைமைகள் திரிவுபடுத்தப்படாமல் நிதர்சனமாக வெளிப்படுத்தப்படுகின்றனவா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் முஸ்லிம்கள்  தொடர்பில் இத்தகைய ஊடகங்களினால் பிரசுரிக்கப்படும் செய்திகளும், கட்டுரைகளும், விமர்சனங்களும் ஒரு சமூகத்தை அல்லது சமூகங்களின் ஒற்றுமையைப் பாதிக்கதாவிதத்திலும் சம்பவங்களைத் திரிவுபடுத்தாத விதத்திலும் இனமுறுகளை தோற்றுவிக்காத வகையிலும் ஊடக தர்மத்தோடு வெளிவருவதற்;கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறதாக என்றால் அதற்கான பொதுவான பதில் இல்லையாகும்.

யுத்த முடிவின் பின்னரான இந்நாட்டின் அமைதிச் சூழ்நிலையில் அமைதியைக் குழைப்பதற்காக பெரும்பான்மை சமூகத்தின் மத்தியிலிருந்து அச்சமூகத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, அச்சமூகத்தை  நல்வழிப்படுத்துகின்ற பணியைப் புரியவேண்டியவர்கள் மத வன்முறையாளர்களாக மாறி இந்நாட்டில் வாழுகி;ன்ற சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களுக்கு எதிராக முஸ்லிம்கள்; வாழ்விடம், சமய, சமூக பண்பாட்டு, கலை, கலாசார உணவு உடை திருநாட்கள் என சகல நடவடிக்கைகளிலும் மூக்கை நுழைத்து, அவற்றிற்கு எதிராக மூன்றாம் சக்திகளின் ஒத்துழைப்புடன் செயற்பட்டுக்கொண்டிருப்பதை தமிழ் பேசும் சமூகத்தின் மத்தியிலிருந்து வெளிவரும் அச்சு ஊடகங்கள் அவ்வப்போது வெளிப்படுத்திக்;கொண்டிருக்கின்றன.

ஆனால், எச்சமூகத்தில் உள்ளவர்களிடையே சிறுபான்மை சமூகங்களின் செய்திகள் சென்றடைய வேண்டும் என்ற இலக்கு உள்ளதோ அந்த இலக்கை அடைவதற்கான முயற்சிகள் தேசிய மட்டத்தில் இது வரை தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகம் முழுiயாக முன்னெடுக்கவில்லை.

இந்நிலையில்;, பெரும்பான்மை சமூகத்திலுள்ள பெரும்பாலான மக்களால் அங்கீகரிக்கப்படாத கடும்போக்கு எண்ணங்களைக்; கொண்ட அமைப்புக்களினதும் அவ்வமைப்புக்களின் பிரதிநிதிகளினதும் நடவடிக்கைகள் குறித்து  முஸ்லிம் சமூகத்திலுள்ளவர்களினால் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களும், நியாயங்களும் வேண்டி நிற்கும் தீர்வுகளும் சிங்கள மொழி மூல ஊடகத்தினூடாக சிங்கள மக்களிடையே சென்றடைவதற்கான வழிகள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில் இன்னும் ஏற்படுத்தப்படுத்தப்பட  வில்லை. ஆனால் முஸ்லிம்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டு வருகின்றன போலிப் பரப்புரைகளுக்கு பலமான முறையில் பதிலுரைக்க வேண்டிய பொறுப்பு சிங்கள மொழியில் பரீட்சமுள்ளவர்களின் தார்மீக பொறுப்பாகவுள்ளது. ஆந்தப் பொறுப்பை முஸ்லிம் சமூகத்திலுள்ள ஒரு சில விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள் நிறைவேற்றி வந்தாலும்  மொழியாற்றல் இருந்தும் பலர் இப்பொறுப்பிலிருந்து தவிர்ந்து தாங்களும் தங்களது பாடும் என்ற மனநிலையில் இருப்பதை பலமான போலிப் பிரச்சாரங்களுக்கு பலமாக பதிலுரைக்க முடியாமல் இருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்..

நடுநிலையாக இருந்து சிந்திக்கின்ற சிங்கள  மக்களிடையே முஸ்லிம் சமூகத்தின் கருத்துக்கள்; தினசரி சென்றடைய வேண்டுமானால் குறைந்தபட்சம்  சிங்கள மொழியிலான தினசரி அச்சு ஊடகம் உருவாக்கப்படுவது முக்கிய் அதி முக்கிய தேவையாகக் கருதப்பட வேண்டும். ஏனெனில் கிராமப்புற மக்களிடையே முஸ்லிம்கள் தொடர்பாக சென்றடைகின்ற போலிப் பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் உண்மைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

வர்த்தக நோக்கங்களைத் தவிர்த்து, முஸ்லிம்கள்; நாளாந்தம் எத்தகைய நெருக்கடிகளை எதிர்நோக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுவதற்காக வேண்டியேனும்; முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள், போலிப் பிரச்சாரங்கள் என்பவை குறித்து தமிழ் ஊடகங்களில் வெளிவரும் செய்திகளும் கட்டுரைகளும் மொழிபெயர்புச்  செய்யப்பட்டு குறைந்த பட்சம் ஒரு பொழிபெயர்ப்பு பத்திரிகையாவது சிங்கள மொழியில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலிருந்து  வெளிவருவது காலத்தின் கட்டாயம் என்று உணரப்படுவது அவசியமாகவுள்ளது. 

கடும்போக்கு சிந்தனைகளைக் கொண்ட இனவாதிகளினால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற எதிர்ப்பு மற்றும் போலிப்பிரச்சார நடவடிக்கைகளுக்கு எதிராக முஸ்லிம் சமூகத்திலிருந்து உரிய பதில்கள் அவர்களது மொழியில் அளிக்கப்படுவது அவசியமாகும். வில்பத்து தொடர்பிலும் அமைச்சர் றிஷாட் பதியூதீன் குறித்தும் முன்வைக்கப்படுகின்ற போலிப் பரைப்புரைகள் ஒரு சில சிங்கள ஊடகங்களில் தொடர்ச்சியாக  முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதிலும,; சமூகவலைத்தளங்கள் இதில் பெரும் பங்காற்றி வருகின்றன. 

ஆதலால், முஸ்லிம்கள் எதிர்நோக்கின்ற பிரச்சினைகள், அவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற போலிப் பிரச்சார நடவடிக்கைகள் என்பவற்றுக்கு பதிலலிக்க வேண்டியது காலத்தின் தேவiயாகும். இத்தேவையை நிறைவேற்ற கு றைந்த பட்சம் ஒரு  சிங்கள மொழி மூலமான தினசரிப் பத்திரிகையொன்று தமி;ழ்பேசும் முஸ்லிம் சமூகத்திலிருந்து வெளிவருமாயின் பலமடைந்து வரும் போலிப் பரப்புரைகளுககு பலமான பதில்களைக்  சிங்கள் பௌத்த மக்கள் மத்தயில் கொண்டு செல்ல முடியும் என்பது நிதர்சனமாகும்.

-எம்.எம்.ஏ.ஸமட் 

No comments:

Post a Comment