தர்கா நகர் 'ஆதிலை' அடுத்து பென்தொட்ட பகுதியிலும் ஒருவர் கைது - sonakar.com

Post Top Ad

Friday 26 April 2019

தர்கா நகர் 'ஆதிலை' அடுத்து பென்தொட்ட பகுதியிலும் ஒருவர் கைது


ஐ.எஸ். தீவிரவாத அமைப்போடு தொடர்பு வைத்திருந்ததாகவும் தம்மால் கண்காணிக்கப்பட்டு வந்த நபர் எனவும் பொலிசாரால் உறுதியாக தெரிவிக்கப்படுகின்ற தர்கா நகர் ஆதிலையடுத்து பென்தொட்ட அக்கரை பகுதியிலிருந்து ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக சோனகர்.கொம் பிராந்திய செய்தியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.


சில தினங்களுக்கு முன்பாக தர்கா நகர் சென்ற பொலிசார் அங்கு பொது மக்கள் உதவியைக் கோரியிருந்திருந்த நிலையில் சோதனை நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்றிரவு ஆதிலின் கைது முக்கிய திருப்பமாக பொலிசாரால் தெரிவிக்கப்படுவதுடன் பிரதேசத்தில்  மேலும்  கைதுகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment