சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற அதிரடி சுற்றி வளைப்பொன்றின் பின்னணியில் அங்கு இடம்பெற்ற குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களையடுத்து அப்பகுதியில் உடனடியாக ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது.
ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவான பிரச்சாரப் பொருட்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் தேடல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.
இலங்கையில் ஐ.எஸ் அமைப்பிடம் ஆயுத பயிற்சி பெற்றுள்ள குழுவொன்று இயங்குவதுடன் அவர்களுக்கு உள்ளூர் இராணுவ பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment