மாகந்துரே மதுஷோடு டுபாயில் கைதான நடிகர் ரயன், வசீம்டீன், ஜெராட், பத்மன் சுராஜ் மற்றும் திமுது ஆகியோர் இன்று அங்கிருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபர்களை விமான நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மதுஷினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேளிக்கை நிகழ்வில் கலந்து கொள்ள இலங்கையிலிருந்தும் பலர் சென்றுள்ள அதேவேளை கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் குற்றங்களுக்காக தேடப்படும் மதுஷின் வருகையை எதிர்பார்த்து பொலிசார் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment