வெல்லவாய, மஹவெல்லகம பகுதியில் உள்ள முஸ்லிம் நபர் ஒருவரின் வீடொன்றில் வெடிபொருட்களை மறைத்து வைக்க முயன்ற குழுவொன்று பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளது.
வீட்டின் உரிமையாளர் தொழுகைக்காக சென்றிருந்த நேரத்திலேயே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் குறித்த நபர் வீடு திரும்பிய வேளையில் அங்கு சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டத்தை அவதானித்த நிலையில் பொலிசாருக்குத் தகவல் வழங்கியதன் பின்னணியில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment