மஸ்கெலியா பள்ளிவாசல் ஒன்றின் களஞ்சிய அறையொன்றிலிருந்து 49 கத்திகள் மற்றும் மூன்று கோடரிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
நேற்றைய தினம் ஸ்லேவ் ஐலன்டில் இவ்வாறு பள்ளிவாசல் ஒன்றுக்குள்ளிருந்து வாள்கள் மீட்கப்பட்டிருந்ததுடன் அது தொடர்பில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் தாஜுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை நீர்கொழும்பு பிரதிமேயரும் வாள் ஒன்றை வைத்திருந்த பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மஸ்கெலிய பள்ளிவாசலின் களஞ்சிய அறையின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment