ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொலைத் திட்டம் தொடர்பில் விசாரணை நடாத்தி வரும் பொலிசார், அண்மையில் டுபாயிலிருந்து நாடு திரும்பிய பாடகர் நதீமல் பெரேராவையும் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
முன்னாள் டி.ஐ.ஜி நாலக டி சில்வாவுடன் நதீமலும் அவரது தந்தை அமல் பெரேராவும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்ததாக தெரிவிக்கப்படுவதன் பின்னணியில் இவ்விசாரணை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் உளவாளி நாமல் குமாரவின் தகவலின் பின்னணியில் இவ்விசாரணைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment