தனது தந்தையின் கொலைக்கு பொறுப்பாளி என்ற வகையில் தனக்கான இழப்பீட்டைப் பெற்றுத்தரும் படி அமெரிக்க பிரஜை கோட்டாபேவுக்கு எதிராக அந்நாட்டிலேயே வழக்குத் தொடர்ந்துள்ளார் ஊடகவியலாளர் லசந்தவின் புதல்வி அஹிம்சா விக்ரமதுங்க.
ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படும் பட்சத்தில் தனது அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிடப் போவதாக கோட்டாபே தெரிவிக்கின்ற அதேவேளை அவ்வப்போது அதற்கான நடவடிக்கைகளில் அவர் ஆவணங்களை சமர்ப்பித்து விட்டதாக பெரமுன தரப்பில் செய்தி வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையிலேயே தற்போது கோட்டாபேவுக்கு எதிராக அமெரிக்காவில் சிவில் வழக்கொன்று தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment