டுபாயிலிருந்து இறுதியாகத் திருப்பியனுப்பப் பட்டிருந்த ஐவரில் நால்வர் பொலிஸ் விசாரணைகளையடுத்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் ரயனுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
விரைவில் செய்தியாளர் சந்திப்பை நடாத்தி விளக்கமளிக்கப்போவதாக கூறிச் சென்றிருந்த நிலையில் ரயனுக்கு எதிர்வரும் 11ம் திகதி வரை கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாகந்துரே மதுஷின் வருகையை எதிர்பார்த்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விமான நிலையத்தில் விழிப்புடன் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment