விமான நிலைய பாதுகாப்பு அதிகரிப்பு! - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

விமான நிலைய பாதுகாப்பு அதிகரிப்பு!


கொழும்பு - நீர்கொழும்பு மற்றும் மட்டுநகர் தேவாலயங்கள், கொழும்பின் பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட ஆறு இடங்களில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்புகளையடுத்து கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.



பயணிகள் மாத்திரமே விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவதுடன் அங்கு சோதனை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பின்னணியில் மேலதிக பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் பயணிகளை ஆகக்குறைந்தது 4 மணி நேரம் முன்பாக விமான நிலையம் வரும்படி அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment