தெமட்டகொட: தலைமறைவாக இருந்த தற்கொலைதாரிகளின் சகோதரன் கைது - sonakar.com

Post Top Ad

Sunday 28 April 2019

தெமட்டகொட: தலைமறைவாக இருந்த தற்கொலைதாரிகளின் சகோதரன் கைது



கடந்த சில நாட்களாக தேடப்பட்டு வந்த தெமட்டகொட இப்ராஹிம் குடும்பத்தைச் சேர்ந்த தற்கொலைதாரிகளின் சகோதரன் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மஹாவில கார்டன்ஸ் பகுதியிலேயே குறித்த நபர் பதுங்கியிருந்துள்ள அதேவேளை இன்று காலை இது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றி வளைப்பு இடமபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. 



குறித்த நபரின் இரு சகோதரர்கள் தற்கொலைத் தாக்குதலை நடாத்தியிருந்த அதேவேளை தந்தையும் மேலும் இரு சகோதரர்களும் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் கைதின் போது இரு வாள்கள் மற்றும் வாயுத் துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment