நாட்டில் புர்கா அணிதல் தடை செய்யப்படவேண்டும் என மீண்டும் அரசியல் மட்டத்தில் குரல் எழுப்பப்பட்டுள்ள நிலையில் அதனை வலியுறுத்தி திட்டமிட்ட வீதிச் சர்ச்சைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
இதன் பின்னணியில் இயங்குவோர் இதனை 'விழிப்புணர்வு' நடவடிக்கை என விளக்கமளிக்க வரும் நிலையில் நேற்று மாலையிலிருந்து வத்தளை பகுதிகளில் ஆண்கள் புர்கா அணிந்து நடமாடி சர்ச்சைகளை உருவாக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.
இன்று, ஹெந்தலயில் இவ்வாறு திட்டமிட்டு நடாத்தப்பட்ட சம்பவம் ஒன்றின் படங்கள் பல்வேறு விளக்கங்களுடன் சமூக வலைத்தளங்களில் தற்சமயம் உலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment