2012லிருந்து நிலவி வந்த அலுகோசு வெற்றிடத்துக்கு நேர்முகத் தேர்வுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இருவரின் ஆளடையாளங்களை இரகசியமாக வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இறுதியாகத் தேர்வான இருவரின் மனநல பரிசோதனைகள் இடம்பெறவுள்ள அதேவேளை சம்பளம் தலா 36,620 ரூபா என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது தொடர்ந்தும் சந்தேகத்துக்குரியது என அரசியல் வட்டாரத்தில் கருத்து வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment